அதிகம் பயணிக்காத சாலையில் பயணிக்க யாருக்கேனும் ஆசைவருமா? பெரும்பாலும் வருவதில்லை. ரிஸ்க் எடுக்க விரும்பாததால் `நமக்கேன் வம்பு’ என நினைத்து அனைவரும் செல்லும் பாதையிலேயே நாமும் பயணிக்கவிரும்புவோம். ஆனால் அதில் விதிவிலக்காக இருந்தவர்
அந்தக் காலத்தில் தரையில் படுத்து உறங்கினோம், தரையில் உட்கார்ந்து சாப்பிட்டோம், தரையில் உட்கார்ந்து பள்ளிகளில் பாடம் படித்தோம். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இதனால் உடல் நலமாக இருந்தது. மூட்டுகள் பலமாக இருந்தன. டாக்டர்களிடம் அதிகம் சென்றதில்லை. அதனால் பர்சும் கனமாகவே இருந்தது. சேமிப்பும், உடல் நலமும் கூடியது. தைக்கால், பத்தமடை என்ற ஊர்கள் பாய் விற்பனைக்கு பலம் சேர்த்தன. காலங்கள் மாறின, வருடங்கள் ஓடின. பாய்கள் சுருட்டி பரணில் வைக்கப்பட்டன. அப்போதெல்லாம் கட்டில், பீரோ செய்ய வேண்டுமென்றாலும் கூட நம் வீட்டுக்கென ஒரு ஆசாரி இருப்பார். அவர் நம் வீட்டிற்கே வந்து பல நாட்கள் தங்கி மரங்களை இழைத்து, இழைத்து செய்து தருவார். அவையும் பல காலம் உழைக்கும்.
முன்பெல்லாம் சிலரின் வீடுகளில் மட்டுமே இருந்த கட்டில், பீரோ, மெத்தைகள், வார்ட் ரோப், டேபிள், சேர் ஆகியவை, இன்று இல்லாத வீடே இல்லை என்ற அளவிற்கு வந்து விட்டது. பல ஆர்கனைஸ்டு பர்னீச்சர் கம்பெனிகள் பின்னர் வந்தன. இவற்றில் பல காணாமலும் போயின.
இந்த துறையின் தற்போதைய மார்க்கெட் மதிப்பு 16 பில்லியன் டாலர் (112,000 கோடி ரூபாய்கள்) ஆகும். இன்னும் 5 வருடத்தில் இது 25 பில்லியன் டாலர் (175,000 கோடி ரூபாய்) மதிப்புள்ளதாக அதிகரிக்க உள்ளது. இந்தத் துறையில் அன் ஆர்கனைஸ்ட் (UNORGANISED) லோக்கல் கம்பெனிகள் தாம் பெரிய இடத்தை பிடித்துள்ளன. அதாவது தற்போது சுமார் 95 சதவீதம் வரை இருக்கின்றன. இது இன்னும் 5 வருடத்தில் 90 சதவீதமாக குறையும்.
இதிலிருந்து இந்த துறையில் ஒரு பெரிய பிசினஸ் ஆப்பர்சூனிட்டி இருக்கிறது என்று உங்களுக்கு புரியவில்லையா? ஆனால் இன்று பல பெரிய கம்பெனிகளுக்கு புரிந்திருக்கிறது.
ஆமாம், தடதடவென பல பெரிய கம்பெனிகள் ரெடிமேட் பர்னீச்சர் விற்பனையில் களம் இறங்கியுள்ளன. இந்த நிறுவனங்கள் விலை உயர்ந்த பர்மா தேக்கு, ரோஸ் வுட் ஆகியவற்றில் எல்லாம் பர்னீச்சர் செய்வதில்லை. ப்ளைவுட் அல்லது விலை குறைந்த ரப்பர் வுட் ஆகியவற்றிலிருந்து பர்னீச்சர்களை தயாரித்து குறைந்த விலையில் அளிக்கின்றன.
இப்போது பர்னீச்சர் வாங்குபவர்களும், இளைஞர்களும் அவை ஐந்து வருடம் உழைத்தால் போதும் என்ற எண்ணத்தில்தான் வாங்குகின்றனர். காரணம் புதிது, புதிதாக மாற்றிக் கொண்டிருப்பதில் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி.
இந்த மார்க்கெட் மதிப்பு தெரிந்துதான் உலகத்தின் பெரிய பர்னீச்சர் ரீடெய்லரான ஐக்கியா (IKEA) இந்தியாவில் களம் இறங்கியிருக்கிறது. ஹைதராபாத்தில் ஒரு மிகப்பெரிய ஷோ ரூமை 400,000 சதுர அடியில் திறந்துள்ளது.
பிளிப்கார்ட், தங்களுக்கென பர்பெக்ட் ஹோம் ஸ்டூடியோ (PERFECT HOME STUDIO) என்ற கம்பெனியை ஆரம்பித்திருக்கிறது. பிடிலைட் (பெவிகால் தயாரிக்கும் கம்பெனி) பெப்பர் ப்ரை என்ற பர்னீச்சர் விற்பனை கம்பெனியில் முதலீடு செய்திருக்கிறது. ரிலையன்ஸ் இன்னும் களத்தில் இறங்கவில்லை.
முன்பெல்லாம் கர்ப்பமான பெண்கள், பிரசவ நாள் வரையும் நன்றாக குனிந்து நிமிர்ந்து வேலை செய்வார்கள். பிரசவமும் சிக்கலில்லாமல் சுகப்பிரசவமாக இருக்கும். ஆனால் இப்போது எல்லா வேலைகளையும் மெஷின்கள் செய்வதால், பெண்களுக்கு உடல் உழைப்பு குறைந்துவிட்டது. பெரும்பாலான பெண்கள் வேலைக்குச் செல்வதால், வீட்டில் வேலை செய்யவோ, உடற்பயிற்சி செய்யவோ இயலாத நிலை. இதனால் இப்போதெல்லாம் சுகப்பிரசவம் என்பதே அரிதாகிவிட்டது. இந்தக்குறையைத் தீர்க்கிறது, உமையாள் சம்பந்தம் என்பவரால்
ஒரு நாள் சான்ஃப்ரான்சிஸ்கோ காஃபி ஷாப்பில் அமர்ந்திருக்கும்போது, தான் ஆரம்பிக்க இருக்கும் நிறுவனத்துக்கு `அலிபாபா’ என பெயர் வைத்தால் எப்படியிருக்கும் என யோசித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அங்கு காஃபி கொண்டுவந்த பணியாளப் பெண்ணிடம் `அலிபாபா’ என்றால் என்னவென்று தெரியுமா எனக் கேட்க அவர், `ஓப்பன் சீசேம் (திறந்திடு சீசேம்)” என பதிலளித்தார்
உங்களிடம் ஒரு நல்ல ஐடியா இருக்கிறது, அதை ஒரு வணிக வடிவமாக மாற்ற விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது உங்களுக்கு யார் உதவுவார்கள் என்ற எண்ணம் தான் முதலில் வரும்.
இந்தியாவில் எஜுகேஷன் சம்பந்தப்பட்ட ஸ்டார்ட் அப்கள் 3500 க்கும் மேல் இருக்கின்றன. இவை மாணவர்களுக்கு படிப்பு சொல்லித் தர, மேல் படிப்பிற்கு தயார் செய்ய, போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்ய என்ற பல வகைகளில் இருக்கின்றன
நான், “வெஜிடேரியன்” என்று பலர் சொல்வதை கேட்டிருக்கிறோம். ஆனால் தற்சமயம் பலர் ஹோட்டல்களில் மற்ற இடங்களில் நான் “வேகன்” என்று கூறுவதை கேட்கிறோம். வெஜிடேரியனுக்கும், வேகனுக்கும் என்ன வித்தியாசம் என்று பார்த்தால், வெஜிடேரியன் எந்தவிதமான அசைவமும் சாப்பிட மாட்டார்கள். ஆனால் வேகன் அதற்கு மேலே ஒரு படி கூடுதல், அசைவம் சாப்பிடாமல் இருப்பது மட்டுமல்ல, பிராணிகள் மூலம் உருவாகும் எந்தப் பொருளையும்
ஆன்லைன் விற்பனைகள் கூடி வரும் நேரத்தில் மக்கள் தொகை அதிகமாக உள்ள இந்தியாவில், ஜனநெருக்கடி மிகுந்த நகரங்களில், போட்டிகள் நிறைந்த ஆன்லைன் கம்பெனிகளுக்கு இருக்கும் பெரிய தலைவலி சரியான நேரத்தில் தங்களுடைய ஆர்டர்களை டெலிவரி செய்வதுதான்
பெரிய அளவிலான சமூக-பொருளாதார தாக்கத்தை உருவாக்க உதவுகிற தனிப்பட்ட யோசனைகள் மற்றும் பிசினஸ் ஐடியாஸ் இருப்பவர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம் என்ற விதிகளுடன் சுகாதாரப் பாதுகாப்பு, நிதி மற்றும் டிஜிட்டல் சேர்க்கை, கல்வி, கிராமப்புற பொருளாதாரம், குடிமகன் பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒரு மாற்றத்தை உருவாக்கும் முதல் ஐந்து வெற்றியாளர்களுக்கு இந்த விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது
உடலுக்குத் தீங்கு தராத, கெமிக்கல் ஏதும் கலக்காத வகையில் கொசுக்களைக் கொல்லும் ஒரு சிறிய கருவியையும், அதில் உபயோகப்படுத்துவதற்கான கொசுவிரட்டி திரவத்தையும் கண்டு பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள் சென்னை ஐஐடியில் படித்த முன்னாள் மாணவர்கள்