இந்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்களின் அமைச்சகம் வெளியிட்ட உலக உணவு இந்தியா 2017 மாநாட்டின் அறிக்கையின் புள்ளி விபரங்களை இங்கு காண்பது மிகவும் முக்கியமானது. நவீன அறுவடை முறைகள் மற்றும் குளிர்பதன வசதிகள் உள்கட்டமைப்பு போதுமானதாக இல்லாததால், ஆண்டுதோறும் பழங்கள் மற்றும் காய்கறிகள் 4.6% முதல் 15.9% வரை வீணடிக்கப்படுவதை நாம் காணமுடிகின்றது.
தன்னுடைய நலத்திற்காக ஆரம்பித்து பல அணுகூலங்கள் கண்ட கரூரைச் சேர்ந்த இல்லத்தரசி கருணாம்பிகை, மற்ற பெண்களுக்கும் பயன்பட வேண்டும் என நினைத்து தொடங்கியதுதான் ‘மெல்லினம்’ ஆர்கானிக் சானிடரி நாப்கின் தயாரிக்கும் சிறுதொழில். அதற்கு துணையாக இருப்பவர் துணைவர் அருள்முருகன்.
சமீப நாட்களில் மறு உபயோகம் (Reuse) என்ற சொல்லை அடிக்கடி கேட்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்திருக்கும். இது முகக் கவசமாகட்டும் ஆடைகளாகட்டும் நாம்அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சாதனங்களுக்கு மிகவும் பொருத்தமானது. பொருட்களின் விநியோக முறையில் தட்டுப்பாடு வரும்போது, அல்லது அளவுக்கு அதிகமாக பயன்படுத்திவிட்டு, குப்பையில் வீசும் நேரம் வரும்போது, Reuse (மறுஉபயோகம்) என்ற சொல்லின் முக்கியத்துவத்தை அடிக்கடி உணர முடிகின்றது. எந்த தொழிலிலும் உற்பத்தித்திறனை அதிகரித்து அதிகமான பொருட்களை கொண்டு வருவதில் எந்த விதமான ஐயமுமில்லை. உபயோகப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழ்நிலையில் இது எல்லா காலகட்டத்திற்கும் பொருந்தும். அதேசமயத்தில் பயன்படுத்திய பிறகு அதை கழிவாகக் (Waste) கருதும் பொழுது அந்தக் கழிவை வெளியேற்றுவது இப்போது மிகப்பெரும் சவாலாக உள்ளது.
‘Ethically’ என்ற வார்த்தைக்கு தமிழ் அகராதியில் பொருள் தேடினால், “நேர்மையான”, “நெறிமுறையான” என்ற அர்த்தங்களை சொல்லும்.
கரோனா காலத்திற்கு முன்பு உலகளவில் அதிகமாக விற்ற பொருட்களில் ஒன்று பெண்களின் தேவைகளுக்கான பொருட்கள் ஆகும். அதாவது மேக்கப், சரும பாதுகாப்பு, தலைமுடி பாதுகாப்பு, உடல் பாதுகாப்பு, இயற்கை அழகு சாதனங்கள், அம்மாவிற்கு குழந்தைக்கு தேவையான பொருட்கள், வாசனை திரவியங்கள் என்பதெல்லாம் இதில் அடங்கும்.
சென்னை ஆதம்பாக்கத்தில் ஒரு வீட்டில் இயங்குகிறது ‘ஸ்பெஷாலிட்டி ஃபுட்ஸ்’ என்னும் அந்த சிறு உணவுத் தொழிற்சாலை. பகல் வேளையில் பம்பரமாகச் சுழன்று மணக்க மணக்க சேவை, பொடி இட்லி, மினி இட்லி மற்றும் கொழுக்கட்டை வகைகளை தயாரிக்கின்றனர். பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் அந்த பலகாரங்கள் பிற்பகலில் ‘பேக்கிங்’ செய்து, நகரின் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் கேட்டரிங் துறைகளுக்கு அனுப்புகின்றனர்
ஸ்டார்ட் அப் கம்பெனிகள் வந்ததிலிருந்து பல புதிய வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (என்.பி.எப்.சி.,) தொழில் நுட்பத்தை அடிப்படையாக வைத்து ஆரம்பிக்கப்பட்டவை. இவை கடன்கள் வழங்க ஆரம்பித்திருக்கின்றன. அதாவது அதிக கிளைகள் இல்லாமல் ஆன்லைன் மூலமாக கடன் வழங்கும் வசதிகளை கொண்டவை. கொரோனா போன்ற சமயங்களில் இவை சிறிய, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும், மாத சம்பளதாரர்களுக்கும், கம்பெனிகளுக்கும் இவர்களின் கடனுதவி உதவிகரமாக இருக்கும். ஆனால் வங்கிகளை விட வட்டிகள் கூடுதல் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவியதால் பல கம்பெனிகள் நீங்கள் வீட்டிலிருந்தே அலுவலக வேலைகளை செய்யலாம் என பச்சைக் கொடி அசைத்து விட்டனர். எனவே முழு இயக்கமும் நின்றுவிடாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. வீட்டிலிருந்து வேலை செய்வதால் பல அசௌகரியங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக அலுவலகங்களில் நடைபெறும் மீட்டிங், பிரசன்டேஷன் போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க வாய்ப்புகள் உண்டு.
தற்போதைய காலகட்டத்தில் பொருட்கள் உபயோகப்பாளர்களுக்கு கிடைப்பதில் பல்வேறு மாற்றங்களை காண முடிகின்றது. ஒரு சமயத்தில் தேவைக்கும் அதிகமாக பொருட்கள் கிடைக்கும் சூழ்நிலை. மற்றொரு சமயத்தில் தட்டுப்பாடான சூழ்நிலை. இந்த மாதிரி வேறுபட்ட சூழ்நிலைகளுக்கு பல்வேறு காரணிகள் மூலமாக இருக்கின்றது.
கொரோனா தொற்று வந்தவர்கள் உயிர் பிழைக்க மிகவும் அவசியம் வெண்டிலேட்டர். காரணம் இந்த கிருமிகள் சுவாசக் குழாயில் சென்று அந்த நோயாளியை மூச்சு விட சிரமமாக்கி விடுகிறது. இதனால் அவர் குணமடையும் வரை அந்த நோயாளிக்கு வெண்டிலேட்டரின் உதவி மிகவும் அவசியம். மருத்துவமனைகள் வைத்திருக்கும் வெண்டிலேட்டர்கள் லட்சக்கணக்கில் (சுமார் 600,000 ரூபாய்) விலையாக இருப்பதாலும், பற்றாக்குறையாக இருப்பதாலும் நோயாளிகளுக்கு தற்போதைய முக்கிய தேவையான வெண்டிலேட்டர்களை தயாரிக்க உடனடியாக களம் இறங்கியிருப்பவை சில ஸ்டார்ட் அப் கம்பெனிகள்.