வித்தியாசமான பெயரில் விசித்திரமான முறையில் ஒருங்கிணைந்த இயற்கை வேளாண் பண்ணையை குவைத்தில் இருந்தபடியே வழி நடத்துகிறார் திரு. குமரேசன்.
உலகத்தில் கொடிய நோய்களில் ஒன்று கேன்சர். யாருக்கு வரும், எப்போது வரும், உடலில் எந்த இடத்தில் வரும் என்று சொல்ல முடியாத ஒரு நோய். தன் குடும்பத்தில் ஒருவருக்கு கேன்சர் வந்து, அவர் படும் கஷ்டங்களை பார்த்து தாங்கமுடியாமல், கேன்சர் வந்தவர்களுக்கு உதவும் ந்ல்ல எண்ணத்தில் தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனம் இது.
பரபரப்பான இந்த உலகத்தில் நாம் சாப்பிடும் உணவுகள் உண்மையில் ஆரோக்கியமானதா என்ற சந்தேகம் அனைவருக்குமே இருக்கிறது.
கோயம்புத்தூர் – பி. என். புதூரில் இயங்கும் சவுமி ஹெர்பல்ஸ் (Soumee Herbals) நிறுவனர் திரு. ராமநாதன் அவர்கள் விற்பனை செய்து வரும் மூலிகை டீ மற்றும் மூலிகை தலைக் குளியல் பவுடர் (Head Wash Powder) குறித்து அலைபேசியில் பேசும்போது, நமது முன்னோர்கள் கண்டுபிடித்து பயன்படுத்திய பல மூலிகைகளின் அருமை, பெருமைகளை தெரிந்து கொள்ள முடிந்தது.
சிதம்பரம் ஸ்ரீ ஷண்முகவிலாஸ் ஸ்வீட் ஸ்டால் நிறுவனம் நகரின் முக்கிய பகுதியான தெற்கு ரத வீதியில் அமைந்துள்ளது. இதன் உரிமையாளர் திரு. கணேஷ் அவர்களுடன் தொலைபேசியில் பேசும்போது மிகவும் சுவாரசியமான, அறுசுவை தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. கொரொனா பெருந்தொற்று பெருகிய இந்த காலகட்டத்தில் கூட இந்நிறுவனம் தனது சிறப்பான சேவையை சிதம்பரம் மற்றும் சுற்று வட்டார மக்களுக்கு ஆற்றிவருவது பாராட்டத்தக்கது.
உலக அளவில் நொறுக்குத்தீனிகள் மார்க்கெட் கிட்டத்தட்ட 170 பில்லியன் டாலராக (ரூபாய் 12,75,000 கோடி) இருக்கிறது. ஆண்டுதோறும் இந்தத் துறை 7% வளர்ச்சி அடைவது குறிப்பிடத்தக்கது. கொரோனா காலத்திலும் அதிகம் பாதிக்காத துறைகளில் இதுவும் ஒன்று.
திண்டுக்கல் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தாடிக்கொம்பு என்ற இடத்தில் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் உலகத் தரம் வாய்ந்த குளிர் சாதன கிடங்கு NSR ஃபார்ம் ஃபிரெஷ் (NSR Farm Fresh). தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் இந்த குளிர்பதன கிடங்கு நிறுவனர் திரு. N.S.ரத்தினம் சந்திரசேகரன் அவர்கள் தனது மகன்களோடு சேர்ந்து சிறப்பாக நிர்வாகம் செய்து வருகிறார். இது தென்னிந்தியாவின் மிகப் பெரிய காய்கறி மொத்த வியாபார சந்தைக்கு பெயர்போன ஒட்டன்சத்திரத்திற்கு மிக அருகில் இருப்பதால், கம்பம், தேனி, கொடைக்கானல், கரூர், திருச்சி மற்றும் பெரம்பலூர் போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகள் எளிதில் சென்று அணுக முடிகிறது. சுற்றுவட்டார விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கிறது.
டீ கடைக்கு நாம் சென்றால் “நாலு டீயில் ரெண்டு அரை சக்கரை, ஒண்ணு சக்கரை இல்லாமல், ஒண்ணு நார்மல் சக்கரை” என சொல்லக் கேட்பது சகஜம். அந்த அளவுக்கு பெரும்பாலான மக்களை சர்க்கரை நோய் பாடாய்ப்படுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக வந்திருப்பது இனிப்புத் துளசி எனப்படும் சீனித்துளசி.
உலக சுகாதார மையம் (WHO), ஆயுஷ் (AYUSH), மற்றும் ஐஎஸ்ஓ (ISO) போன்ற அங்கீகாரங்களைப் பெற்ற, திருச்சியில் உள்ள ஆரண்யா ஹெல்த்கேர் நிறுவனர் திருமதி. வீரஜோதி அவர்களை அலைபேசியில் பேட்டி எடுக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. இயக்குனராக இருந்து நிறுவனத்தை திறம்பட இயக்கும் இவரது கணவர் திரு. மாரிமுத்து அவர்களும் பேட்டியில் இணைந்து கொண்டார்.
பூமியில் வசிக்கும் மானிடர்களுக்கு அமுதம் கிடைக்க வாய்ப்பில்லை. அதற்குப் பதிலாக, அவர்களுக்கு வாய்த்திருப்பது பால்!’ என்கின்றன வேதங்கள். இதில் இருந்தே பாலின் மகத்துவத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.