இந்தியாவில் தற்போது ஆறு கோடிக்கும் அதிகமான குறு, சிறு மற்றும் நடுத்தர கம்பெனிகள் இருக்கின்றன. அதாவது எம்.எஸ்.எம்.இ., (MSME) என்று அழைக்கப்படும் கம்பெனிகள். இது தவிர இந்தியாவில் லட்சக்கணக்கான கைவினைக் கலைஞர்கள், ஸ்டார்ட் அப் கம்பெனிகள் உள்ளது. இவர்கள் வெளிநாடுகளில் தங்களுடைய பொருட்களை விற்பதுதான் கடினமான காரியம், இதுதான் இந்த கம்பெனிகளின் தலையாய பிரச்சினை.
திண்டுக்கல் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தாடிக்கொம்பு என்ற இடத்தில் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் உலகத் தரம் வாய்ந்த குளிர் சாதன கிடங்கு NSR ஃபார்ம் ஃபிரெஷ் (NSR Farm Fresh). தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் இந்த குளிர்பதன கிடங்கு நிறுவனர் திரு. N.S.ரத்தினம் சந்திரசேகரன் அவர்கள் தனது மகன்களோடு சேர்ந்து சிறப்பாக நிர்வாகம் செய்து வருகிறார். இது தென்னிந்தியாவின் மிகப் பெரிய காய்கறி மொத்த வியாபார சந்தைக்கு பெயர்போன ஒட்டன்சத்திரத்திற்கு மிக அருகில் இருப்பதால், கம்பம், தேனி, கொடைக்கானல், கரூர், திருச்சி மற்றும் பெரம்பலூர் போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகள் எளிதில் சென்று அணுக முடிகிறது. சுற்றுவட்டார விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கிறது.
இந்த நாடே பெருந்தொற்று நோயுடன் போராடிக் கொண்டிருக்கும்போது ‘Necessity is the mother of invention’ (தேவைதான் கண்டுபிடிப்பின் தாய்) என்ற வாசகத்துக்கு இணங்க, சில புதிய முயற்சிகளும் கண்டுபிடிப்புகளும் நாள்தோறும் வந்து கொண்டிருக்கின்றன. இப்போது எல்லா அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் என எங்கு சென்றாலும் உள்ளே நுழையும்போதே சானிடைசர் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்ய வேண்டியிருக்கிறது. சானிடைசரை டிஸ்பென்ஸ் செய்வதற்காக காலால் பெடல் மூலம் இயக்கப்படும் சானிடைசர் டிஸ்பென்சர் என்ற ஒரு இயந்திரம் கிட்டத்தட்ட கட்டாயம் இருக்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இப்போது சந்தையில் விற்றுக் கொண்டிருக்கும் இயந்திரங்கள் ஸ்டீல் ஆங்கிள்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. அதற்கு மாற்றாக கார்ட்போர்டு என்ற காகித அட்டைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சானிடைசர் ஸ்டாண்டுகளை பொறியியல் பட்டதாரி இளைஞர் திரு. கார்த்திக் ரத்தினம் ஒரு ஸ்டார்ட்அப்தொழிலாக ஆரம்பித்து இந்த தயாரிப்பை வெற்றிகரமாக சந்தைக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவருடன் நாம் அலைபேசியில் தொடர்பு கொண்ட கலந்துரையாடலின் விவரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
டீ கடைக்கு நாம் சென்றால் “நாலு டீயில் ரெண்டு அரை சக்கரை, ஒண்ணு சக்கரை இல்லாமல், ஒண்ணு நார்மல் சக்கரை” என சொல்லக் கேட்பது சகஜம். அந்த அளவுக்கு பெரும்பாலான மக்களை சர்க்கரை நோய் பாடாய்ப்படுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக வந்திருப்பது இனிப்புத் துளசி எனப்படும் சீனித்துளசி.
நாட்டில் புதுமை மற்றும் தொடக்கத் திறன்களை வளர்ப்பதற்கு ஒரு வலுவான சுற்றுச்சூழல் அமைப்பதை இலக்காகக் கொண்டது ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம். தொழில் வளம்தான் இந்தியாவை நிமிர்த்தும், வேலை வாய்ப்புக்களை உருவாக்கும், அதுவும் புதிய எண்ணங்களுடன் வரும் ஸ்டார்ட் அப்-கள் நாட்டை வளப்படுத்தும் என்பது தான் இந்த திட்டத்தின் எண்ணம். இதை மையமாக வைத்து ஆரம்பிக்கப்படும் கம்பெனிகள் தான் ஸ்டார்ட் அப் கம்பெனிகள் எனப்படும்.
ஸ்டார்ட்அப் கம்பெனிகள் என்றாலே புதுமையான ஐடியாக்களுடன் வருபவர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தாடியை சிறப்பாக வளர்ப்பது எப்படி என்று ஒரு ஸ்டார்ட்அப் கம்பெனி தொடங்கி அதில் பெரிய வெற்றியும் பெற்றிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
பெட்ரோல் விலை விர்ரென ஏறிக்கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் ஆபத்பாந்தவனாக இருப்பது எலக்ட்ரிக் வாகனங்கள்தான். அதுவும் குறிப்பாக பொருட்களை வீடுகளில் டெலிவரி செய்யும் வேலைகளில் இருப்பவர்கள் இரு சக்கர வாகனங்களை தாங்களே சொந்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது எழுதப்படாத ஒரு விதி. இவர்களில் பெரும்பாலும் பெட்ரோலில் ஓடும் இரு சக்கர வாகனங்களையே பயன்படுத்துகிறார்கள். இதனால் இவர்களுக்கு தினசரி எரிபொருள் செலவு அதிகரித்து அவர்களுடைய வருமானம் குறைய நேரிடுகிறது. இவர்கள் எரிபொருள் சிக்கனம் மூலம் மாதம் 7000 ரூபாய் வரை சேமிக்க வழி வகை செய்யும் விதத்தில் ஒரு ஈ-பைக் கம்பெனி இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இன்று சிறிய அளவில் பிசினஸ் செய்கிறவர்களுக்கு இருக்கும் ஒரு பெரிய கஷ்டம் என்னவென்றால், யார் யாருக்கு என்னென்ன கடன்கள் கொடுத்திருக்கிறோம் என்பதை குறித்து வைத்து கொள்வதுதான். விற்கும் போது சின்ன சின்ன துண்டு சீட்டில் எழுதி வைத்துவிட்டு அப்படியே மறந்து விடுவது வழக்கம். பின்னர் அந்த பணத்தில் பாதி வராமல் போய்விடும்.
சென்னை – ஆழ்வார்ப்பேட்டை ‘மில்லட் மேஜிக் மீல்’ உணவகத்தில் ‘மில்லட்’ வகைகளில் பல சுவையான ‘மேஜிக்’ ரெசிபிகளைப் பார்க்கலாம்!
ஐடியாக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதுபோல கல்லூரி மாணவர்களிடம் இருக்கும் புதுமையான சிந்தனைகளை, வணிக வடிவமாக்க இந்தியாவில் படிக்கும் இளங்கலை மற்றும் முதுகலை கல்லூரி மாணவர்களுக்கான ஒரு ஸ்டார்ட்-அப் ஐடியாக்கள் போட்டியை கென் 42 (ken 42) என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. ஃபிக்கி (FICCI) உடன் இணைந்து இந்த போட்டியை நடத்துகிறது.