தவறில்லாமல் ஏற்றுமதி செய்வது, ஸ்டார்ட்அப் தொடங்குவது, அதற்கு நிதி பெறுவதற்கு வழிகாட்டும் கருத்தரங்கை
இந்தியாவில் வெளிநாட்டு கம்பெனிகள் back office processing தொடர்பான பணிகளை செய்ய ஆரம்பித்ததிலிருந்தே அந்த கம்பெனிகளில் வேலைக்கான ஆட்கள் தேவை அதிகரித்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான வேலைக்கு ஆட்கள் தேடும் கம்பெனிகள் புதிதாக வந்துள்ளது.
இருந்தாலும், 100 ஆட்கள் ஒரு கம்பெனிக்கு தேவை என்றால் ஆயிரம் பேரிடம் போன் செய்து பேசி அவர்களில் pre-screening செய்து அதன் பின்னர் அந்தந்த கம்பெனிகளுக்கு இண்டர்வியூக்கு அனுப்புவது என்பது ஒரு recruitment company களுக்கு மிகப்பெரிய கடினமான வேலை. இதுவே ஒரு கம்பெனிக்கு 1000 பேர் வரை தேவை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அந்த 1000 பேரை தேர்ந்தெடுப்பது இன்னும் எவ்வளவு கடினமாக இருக்கும்.
குரல் தான் அடிப்படை
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, குரல் அதாவது வாய்வழி தொடர்பு மனிதகுலத்தின் முதன்மையான தகவல்தொடர்பு முறையாக செயல்படுகிறது. இன்றும் கூட, அது நமது தொடர்புகளுக்கு மையமாக உள்ளது. குரல் நமக்குள் வேரூன்றி உள்ளது.
ரூட்டில் (Rootle) என்ற ஸ்டார்ட் அப் கம்பெனி வேலைக்கு ஆட்களை தேர்ந்தெடுக்கும் போது pre-screening க்கு அவர்களை அழைக்கும் போது ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் டெக்னாலஜியை உபயோகப்படுத்தி வேலைக்கு ஆட்கள் சேர்க்கும் பணியில் மனிதனைப் போன்ற உரையாடலைப் பயன்படுத்துவது, ஆட்சேர்ப்பு செயல்முறைக்கு தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் திறமையான தொடர்பைக் கொண்டு வரும் என்று அறிந்து அதில் முழுமையாக கவனம் செலுத்தி வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.
பாரம்பரியமாக நாம் கடைபிடிக்கும் ஒவ்வொருவரையும் நாமே கூப்பிட்டு அவர்களுடன் பேசுவதில் பல நன்மைகள் இருந்தாலும், நாம் ஆட்களை அழைக்கும் போது பாதி நேரங்களில் அவர்களை தொடர்பு கொள்ள முடிவதில்லை. இதனால் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில் பல சமயங்களில் வெறுப்பாகி விடுகிறோம். சரியான திறமையைக் கண்டறிய ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான அழைப்புகளைச் செய்வது ஆட்சேர்ப்பு செய்பவர்களுக்கு சோர்வாக இருக்கிறது.
இதற்கு தீர்வு ஜெனரேட்டிவ் ஏஐ மூலமாக செய்யப்படும் வாய்ஸ் இண்டர்வியூக்கள் தாம். அதாவது இந்த ஸ்டார்ட் அப் கம்பெனி ஆட்டோமேட்டிவ் காலிங் மூலமாக அந்த நபர் கிடைக்கும் வரையில் பல தடவைகள் அவரை தொடர்பு கொள்ளுகிறது. அப்படி தொடர்பு கிடைக்கும் போது தானாகவே வாய்ஸ் இண்டர்வியூவை ஆரம்பிக்கிறது. சரியாக கூறுவதானால், உண்மையான மனித தொடர்புகளைப் பிரதிபலிக்கும் இயற்கையான ஒலி உரையாடல்களை உருவாக்க இது உதவுகிறது.
இது நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல், சாத்தியமான candidates களுடன் தொடர்புகளை உறுதி செய்கிறது.
இந்த ஆட்டோமேஷன் ஆட்சேர்ப்பு செய்பவர்களின் நிர்வாகச் சுமையைக் குறைப்பது மட்டுமல்லாமல், முழு நேர்காணல் செயல்முறையையும் துரிதப்படுத்துகிறது, பணியமர்த்தல் மற்றும் செலவுக்கான நேரத்தை மிச்சப்படுத்துகிறது. இது அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்களைக் கையாள்பவர்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மையாகும். AI அமைப்புகள் மூலம் ஒரே நேரத்தில் பல நேர்காணல்களை திறமையாக கையாள முடியும். இது தேர்வாளர்கள் மதிப்பீட்டின் தரத்தை சமரசம் செய்யாமல் பார்த்து கொள்ளவும் உதவுகிறதுமேலும் விபரங்களுக்கு இந்த ஸ்டார்ட் அப் கம்பெனியின் இணையதளம் www.rootle.ai. சென்று பாருங்கள்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களான சூரிய, காற்று மற்றும் நீர் மின்சாரம் போன்ற சக்திகளை பயன்படுத்துவதன் மூலம் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வுகள் கணிசமாகக் குறைக்கப்படும் அல்லது அகற்றப்படும் ஒரு டிகார்பனைஸ் செய்யப்பட்ட ஆற்றல் அமைப்பை அடைய முடியும்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் நமக்கு பல நன்மைகளைக் தருகிறது. அதாவது இந்த ஆற்றல் சுத்தமானது மற்றும் காலநிலை மாற்றத்திற்கு பங்களிக்கும் அபாயகரமான உமிழ்வை உருவாக்காது. பாரம்பரிய எரிசக்தி ஆதாரங்களை விட இது மிகவும் செலவு குறைந்ததாகும், காரணம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் புதைபடிவ எரிபொருட்களை விட மிகவும் மலிவாக மின்சாரத்தை உருவாக்க முடியும்.
உலகம் தொடர்ந்து வளர்ந்து வருவதால் மற்றும் ஆற்றல் தேவைகள் அதிகரித்து வருவதால், உலகளாவிய எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதில் புதுப்பிக்கத்தக்கவை வருங்காலத்தில் இன்னும் பெரிய பங்கை வகிக்கும்.
சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகியவை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சியின் அடிப்படையில் முன்னணி நாடுகளில் சிலவாகும், சீனா மட்டுமே உலகின் மொத்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனில் கிட்டத்தட்ட பாதியைக் கொண்டுள்ளது.
சூரிய எரிசக்தி
சூரிய எரிசக்தி புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் அபரிமிதமான ஆற்றலுடன் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு தொழிலாகும்.
இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமாக உள்ள நாடுகளில் மின்சார பற்றாக்குறை எப்போதும் இருக்கும். இந்தியாவின் பெரிய பலங்களில் ஒன்று சூரிய சக்தி. அதிலிருந்து மின்சாரம் எடுப்பது தற்போது அதிகமாகி வருகிறது. சூரிய எரிசக்தி இந்தியாவில் அதிக அளவு கிடைத்தாலும், அதில் 50 சதவீதத்திற்கு அதிகமான சக்தியை சரிவர பயன்படுத்துவதில்லை.
சூரிய எரிசக்தியை சரிவர பயன்படுத்த அதலிருந்து எடுக்கப்படும் மின்சார அளவை அதிகரிக்க ரோபாடிக் டெக்னாலஜி நாம் செய்ய முடியாத பல காரியங்களை எளிதாக செய்து விடுகிறது. இதனால் மனித குலத்திற்கு பல பயன்கள் கிடைத்துள்ளன.
என்ன ப்ராபளம்?
சோலார் பேனல்களை பராமரிப்பது கடினமான பணியாகும், குறிப்பாக அவற்றை சுத்தமாக வைத்திருப்பது. சோலார் பேனல்களில் அழுக்கு, தூசி மற்றும் பிற குப்பைகள் குவிவது அவற்றின் செயல்திறனை கணிசமாகக் குறைக்கும், இது குறைந்த ஆற்றல் உற்பத்தி மற்றும் சோலார் ஆலை நடத்துபவர்களுக்கு வருவாய் குறைவிற்கு வழிவகுக்கும். தற்போது சராசரியாக, சோலார் பேனல்கள் பரப்புகளில் பதிக்கப்பட்டிருக்கும் அழுக்கு இழப்புகளால் செயல்திறன் 35% குறைந்துள்ளது.
சோலார் பேனல் சுத்திகரிப்பு தேவை என்பது ஆலை நடத்துபவர்களுக்கு மட்டும் பிரச்சினை இல்லை. சுத்தம் இல்லாததால் சோலார் பேனல்களின் செயல்திறன் குறைவது பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும். சூரிய ஆற்றல் பெருகிய முறையில் பிரபலமான மின்சார ஆதாரமாக மாறுவதால், சோலார் பேனல்களின் செயல்திறனில் ஏதேனும் குறைப்பு ஒட்டுமொத்த ஆற்றல் விநியோகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
எப்படி செயல்படுகிறது?
ஃபோட்டோம் டெக்னாலஜிஸ் என்ற ஸ்டார்ட் அப் கம்பெனி புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைக்கு பயனுள்ள ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் தீர்வுகளை வழங்கும் நோக்குடன் 2018 இல் நிறுவப்பட்டது. மேலே குறிபிட்டுள்ள இந்த சிக்கல்களை தவிர்க்க, ஃபோட்டோம் டெக்னாலஜிஸ் என்ற ஸ்டார்ட் அப் சோலார் பேனல்களை நீரற்ற சுத்தம் மற்றும் ஆய்வு செய்ய ரோபோக்களை உருவாக்கியுள்ளது.
இவர்களின் ரோபோ அமைப்பு சோலார் பேனல்களில் செல்லவும், சுத்தம் மற்றும் மேற்பரப்பு ஆய்வு பணிகளை செய்யவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரோபோ பயன்படுத்தும் துப்புரவு பொறிமுறையானது உலர் துப்புரவு பொறிமுறையாகும், இது அனைத்து வகையான தட்பவெப்ப நிலைகளிலும் பயனுள்ளதாக இருக்கும், நீர் அல்லது இரசாயனங்களின் தேவையை நீக்குகிறது. ரோபோட்டிக் அமைப்பில் ரிமோட் கண்ட்ரோல் மற்றும் கண்காணிப்புக்கான வெப் டேஷ்போர்டும், சோலார் பேனல்களில் மைக்ரோகிராக்குகள் மற்றும் ஹாட்ஸ்பாட்களைக் கண்டறிவதற்கான வெப்ப ஸ்கேனர்கள், பேனல் ஆரோக்கியம் குறித்த தகவல்களையும் வழங்கும்.மேலும் தகவல்களுக்கு இவர்களின் இணையதளத்தை சென்று பாருங்கள் www.photomtechnologies.com.
காமிக்ஸ் என்றால் பலருக்கு சிவகாசி முத்து காமிக்ஸின் முத்தான புத்தகங்கள் தாம் நியாபகத்திற்கு வரும். அந்த அளவிற்கு அவர்களின் இரும்புக் கை மாயாவிலிருந்து பல கேரக்டர்கள் நமக்கு பரிச்சயமானவை. அதன் ஸ்தாபகர் செளந்திரபாண்டியன் தொழில் நிமித்தமாக வெளிநாடுகளுக்கு செல்லும் போது அங்கிருக்கும் காமிக்ஸ் புத்தகங்களை பார்த்து அதனால் ஈர்க்கப்பட்டு அவற்றை தமிழில் வெளியிடும் உரிமைகளை வாங்கி முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் என்று வெளியிட ஆரம்பித்தார். அது குழந்தைகளிடையே மிகவும் வேகமாக புகழ் பெற ஆரம்பித்தது. ஆனால் இவர்களின் காமிக்ஸ் புத்தகங்கள் வெளிநாட்டில் இருந்து காப்பிரைட்ஸ் மூலமாக வாங்கப்பட்டு மொழிபெயர்ப்பு மட்டும் செய்யப்பட்டு வெளியிடப்பட்டதால் கதைகளுக்கு படங்கள் வரையும் வேலையில்லை. முன்பு போல தமிழில் காமிக்ஸ் புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் மக்களுக்கு இல்லையென்றாலும், ஆங்கில காமிக்ஸ்கள் அதிகம் இடத்தை ஆக்கிரமித்து கொண்டாலும், இந்த நிறுவனம் ஆர்வம் காரணமாக இன்னும் 50 வருடங்களாக காமிக்ஸ் புத்தக வெளியீட்டில் இருக்கிறார்கள்.
இவர்கள் தவிர ஓவியக் கலைஞர்களை வைத்து காமிக்ஸ் கதைகளுக்கு படங்கள் வரைந்து வெளியிடும் கம்பெனிகளும் பல இருக்கின்றன. அமர் சித்ர கதா போன்றவை.
அந்த காலத்தில் காமிக்ஸ் கதைகளுக்கு படம் வரைவது என்றால் அதிக நாட்கள் எடுக்கும். ஒவ்வொரு படத்திலும் அந்த காமிக்ஸ் கேரக்டர்களின் முகத்தை சரியாக கொண்டுவருவது என்பது ஒரு பெரிய கலை. அதை சிறந்த ஓவியக் கலைஞர்களால் தான் கொண்டு வர முடியும். பின்னர் இந்த துறையில் டெக்னாலஜிகள் வளர ஆரம்பித்தன. தற்போது வந்திருக்கும் டெக்னாலாஜி மிகவும் ஆச்சரியமான ஒன்றாகும். இதை ஒரு ஸ்டார்ட் அப் சாதித்திருக்கிறது.
2022 வருடத்தில் சானித்யா நரேன், லலித் குடிபதி மற்றும் சௌம்யதீப் முகர்ஜி ஆகியோரால் நிறுவப்பட்ட டாஷ்டூன் (Dashtoon) என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் காமிக்ஸ் உருவாக்கத்தில் ஒரு புதிய அணுகுமுறையைக் கொண்டுவருகிறது, இது வரையும் திறன் இல்லாதவர்கள் கூட காமிக்ஸ் கதைகளுக்கு படங்கள் வரைய முடியும். இது ஆர்ட்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் டெக்னாலஜியை உபயோகித்து கதைளை வசீகரிக்கும் காமிக்ஸாக மாற்றுவதற்கான ஒரு தளத்தை வழங்குகிறது.
இவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் புதுமையான டாஷ்டூன் ஸ்டுடியோவைப் பயன்படுத்தி, படைப்பாளிகளின் ஸ்டோரி போர்டுகளைப் பதிவேற்றுகிறார்கள், பிளாட்ஃபார்ம் லைப்ரரியில் இருந்து கேரக்டர்களை தேர்ந்தெடுக்கிறார்கள் அல்லது காட்சிகளை உருவாக்க படங்களைப் பதிவேற்றுகிறார்கள், தயாரிப்பு நேரத்தை ஒரு எபிசோடிற்கு 40-50 மணி நேரத்திலிருந்து வெறும் 5-6 மணிநேரமாக வெகுவாகக் குறைக்கிறார்கள். இவர்களின் இந்த செயல்திறன் தினசரி எபிசோட் வெளியீடுகள் வெளிவர உதவுகிறது. கதை சொல்லுபவர்களை, எழுத்தாளர்களை ஓவியர்களாக மாற்றும் அதிசயத்தை இந்த ஸ்டார்ட் அப் செய்து வருகிறது.
கிரியேட்டர்கள் கதைகளை கோடிட்டுக் காட்டுகிறார்கள், முக்கிய நபர்களின் குணாதிசயங்கள் மற்றும் வரைபட ஸ்டோரிபோர்டுகளை உருவாக்குகிறார்கள், டாஷ்டூனின் தொழில்நுட்பம் இந்த கூறுகளை மெருகூட்டப்பட்ட காமிக் வெளியீட்டாக மாற்றுகிறது. இது ஒரு ஆச்சரியம் தான்.
காமிக்ஸ் சந்தை
காமிக்ஸ் சந்தை பெரியதாகும். Allied Market Research படி 2022 ஆம் ஆண்டில் உலகளாவிய காமிக் சந்தை 120,000 கோடி ரூபாய்களாக இருக்கிறது. மேலும் 2032 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 200,000 கோடி ரூபாய்களாக உயரும் வாய்ப்புகள் அதிகம்.இவர்களின் இணயதளம் www.dashtoon.com சென்று பாருங்கள். நீங்களும் ஒரு காமிக்ஸ் புத்தகம் கொண்டு வரலாம்.
ஒரு இடம் அல்லது வீடு வாங்கும் போது பல பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும். இந்தியாவில் நில ஆவணத்தை சரிபார்ப்பது கடினமான செயலாகும். ஆவணங்களைப் பெறவும், சரிபார்க்கவும் ஒருவர் பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ரியல் எஸ்டேட் வாங்குவது தொடர்பான ஆவணங்களை சரிபார்க்க இந்தியாவில் பொதுவான தரவுத்தளம் இல்லை. ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு பெயர்களில் ஆவணங்களைத் தயாரிப்பதற்கு வெவ்வேறு வழிகளைக் கொண்டுள்ளன. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து லேண்டீட் (Landeed) என்ற ஒரு ஸ்டார்ட் அப் இந்த செயல்களை விரைவாக முடிக்க வழிவகை செய்கிறது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற முன்னேறிய நாடுகளில் ரியல் எஸ்டேட் வாங்குவது, இந்தியாவுடன் ஒப்பிடும் போது, அதிகம் தொந்தரவு இல்லாதது. இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்ற வழக்குகளில் மூன்றில் இரண்டு பங்கு நிலத் தகராறுகளைப் பற்றியது ஆகும். இந்த ஸ்டார்ட் அப் என்ன செய்கிறது என்றால், மக்கள் தங்கள் சொத்து தொடர்பான பல்வேறு ஆவணங்களைப் பார்க்கவும், வழக்குகளைக் குறைக்கவும் உதவுகிறார்கள்.
பல்வேறு மாநில அரசுகளால் நிறுவப்பட்ட தளங்களை ஒன்றிணைக்கும் தளத்தை லேண்டீட் உருவாக்கியுள்ளது. இந்த ஸ்டார்ட்-அப் ஒவ்வொரு மாநிலத்திலும் பதிவு மற்றும் வருவாய் துறைகளுக்கு இடையே ஒரு பாலத்தை உருவாக்கியுள்ளது, மேலும் நீங்கள் ஒரு சொத்தின் விவரங்களை உள்ளிட்டு, அனைத்து துறைகளில் இருந்து வரைபடங்கள் உட்பட தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் ஒரே நேரத்தில் எடுக்க முடிகிறது. இது ஒரே நேரத்தில் பல பிரச்சனைகளை தீர்க்கிறது.
என்னென்ன ஆவணங்கள்?
இந்தியாவில் உள்ள 20+ மாநிலங்களில் இருந்து 100க்கு அதிகமான சொத்து தொடர்பான ஆவணத்தையும் உங்களுக்கு வழங்குகிறது. நிலம், என்கம்பரன்ஸ் சான்றிதழ்கள், 7/12, RoR, பட்டா/சிட்டா மற்றும் பல ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த ஸ்டார்ட் அப் கம்பெனி இதுவரையில் 10 லட்சம் பேருக்கு மேல் 50 லட்சத்திற்கும் அதிகமான ஆவணங்களை வழங்கியுள்ளது.
மொழிகள் என்று பார்த்தால் ஆங்கிலம், இந்தி, கன்னடம், மராத்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் கிடைக்கிறது. அரசாங்க சர்வர் செயலிழந்தாலும் உங்கள் ஆவணங்களைப் பெறலாம். ஆவணங்கள் தயாரானதும் இந்த ஸ்டார்ட் அப் கம்பெனி உங்களுக்குத் தெரிவிக்கும். அதிகாரப்பூர்வ அரசாங்க தரவுத்தளத்திலிருந்து சில நொடிகளில் சமீபத்திய ஆவணங்களைப் பெறலாம்.
லீகல் ஓப்பினியன்
பல சமயங்களில் டாக்குமெண்ட்களை வழக்கறிஞர்களிடம் கொடுத்து லீகல் ஓப்பினியன் வாங்க வேண்டியிருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் நாம் லீகல் ஓப்பினியன் பெற நாம் தேர்ந்தெடுத்த வழக்கறிஞர் தகுதியான நபர் தானா என்ற சந்தேகம் வரும். இந்த ஸ்டார்ட் அப் லீகல் ஓப்பினியன் வழங்கவும் செய்கிறார்கள். மூத்த வழக்கறிஞர்கள் சொத்து தொடர்பான ஆவணங்களை மதிப்பாய்வு செய்து, சொத்து பற்றிய கருத்தை உங்களுக்கு வழங்குவார்கள். ஒரு சொத்தை வாங்கும்போது, விற்கும்போது அல்லது அடமானம் வைக்கும்போது இது பயனுள்ளதாக இருக்கும்.
லேண்டீட் இலவசமா?
லேண்டீட் முதல் முறை பயனர்களுக்கு, தேடல் வரம்பு வரை இலவசம். அதன் பிறகு, நீங்கள் ஒரு ஆவணத்திற்கு இவ்வளவு பணம் என்று செலுத்த வேண்டியிருக்கும். பல ஆவணங்கள் தேவைப்பட்டால் ஒரு பேக்கேஜ் வாங்கலாம். உபயோகிப்பாளர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு வரம்பற்ற தேடல்களைச் செய்ய முடியும்.
இந்த ஸ்டார்ட்-அப் அடுத்த இரண்டு மாதங்களில் இரண்டு நாடுகளில் இது போன்ற இணையதளத்தை கொண்டுவரவிருக்கிறது.மேலும் விபரங்களுக்கு இவர்களின் இணையதளத்தை சென்று பாருங்கள் www.landeed.com
இந்தியா போன்ற பெரிய நாடுகளில் சுற்றுப்புற சூழல் மாசு பெரிய தீங்குகளை விளைவிக்கிறது. நமக்கு தெரிந்தும், தெரியாமலும் பல மாசுக்களை உருவாக்க காரணமாக நாம் இருக்கிறோம்.
சிறிய பிசினஸ் செய்பவர்கள் தொழிலில் கவனம் செலுத்துவதா? அல்லது கணக்கு வழக்குகளை சரிவர வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்துவதா? என்ற பெரிய கவலை தற்போது இருக்கிறது.
இந்தியாவில் 70 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் கிராமப்புறங்களில் வசிக்கிறார்கள். அதேநேரம் 70 சதவீதத்துக்கும் மேலான டாக்டர்கள் நகரங்களில் வசிக்கின்றனர்.
மருத்துவத்தின் தந்தை, ஹிப்போகிரட்டீஸ், கழுதைப் பாலின் நன்மைகளைப் பற்றி முதலில் எழுதியவர். புராதன எகிப்தின் ராணியான கிளியோபாட்ரா தனது தோலின் அழகையும், இளமையையும் பாதுகாக்க 700 கழுதைகளின் பாலில் குளித்ததாக வரலாறு உண்டு.
உலகத்தில் கொடிய நோய்களில் ஒன்று கேன்சர். யாருக்கு வரும், எப்போது வரும், உடலில் எந்த இடத்தில் வரும் என்று சொல்ல முடியாத ஒரு நோய். தன் குடும்பத்தில் ஒருவருக்கு கேன்சர் வந்து, அவர் படும் கஷ்டங்களை பார்த்து தாங்கமுடியாமல், கேன்சர் வந்தவர்களுக்கு உதவும் ந்ல்ல எண்ணத்தில் தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனம் இது.