சிறிய பிசினஸ் செய்பவர்கள் தொழிலில் கவனம் செலுத்துவதா? அல்லது கணக்கு வழக்குகளை சரிவர வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்துவதா? என்ற பெரிய கவலை தற்போது இருக்கிறது.
அமேசானின் வெற்றி என்பது அமேசான் கடை வாயிலாக பொருட்களை விற்கும் ஆயிரக்கணக்கான சிறிய, நடுத்தர அளவிலான தொழில்களைச் சார்ந்து இருக்கிறது என்பதை புரிந்து கொள்வது முக்கியமானதாகும்.
சுருக்கு பை என்றாலே நமது பாட்டிகளின் நினைவுதான் நமக்கு வரும். அந்த அளவுக்கு பழங்காலம் தொட்டே பாட்டிகளை தொட்டு உறவாடும் சுருக்கு பைகள்.
2011 ஆம் ஆண்டில், இந்தியாவில் டியோட்ரண்ட் சந்தை இந்துஸ்தான் யுனிலீவரின் ஆக்ஸ் , பார்க் அவென்யூ மற்றும் நிவியா போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகள் சந்தையை பெருமளவில் கைப்பற்றியிருந்தன.
வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவது கடினம். ஆனால் இழப்பது எளிது. உங்களுடைய வணிகம் என்ன என்பதை உருவாக்க வாடிக்கையாளர்களை அனுமதிக்கும்பட்சத்தில் அவர்கள் உங்களுக்கு விசுவாசமாக இருப்பார்கள்.
சில்லறை விற்பனையில் சாதனை படைத்த ஃப்யூச்சர் குழுமத்தின் நிறுவனரான கிஷோர் பியானி எழுதியுள்ள புத்தகம், IT HAPPENED IN INDIA. ராஜஸ்தானில் உள்ள நடுத்தர வியாபார பனியா கூட்டு குடும்பத்திலிருந்து மும்பைக்கு குடியேறிய கிஷோரின் குடும்பத்தினர் டெக்ஸ்டைல் வியாபாரத்தை நடத்தி வந்தனர். பாரம்பரிய வணிகத்தில் இருந்து விலகி இருந்த கிஷோர், இந்தியாவின் சில்லறை விற்பனை முறையை ஆழ்ந்து கவனித்தார் . இந்தியா ஒரு மாறுபட்ட நாடு என்பதையும் பிராந்திய அளவில் நுகர்வோர்களின் நடத்தைகளிலும் விருப்பங்களிலும் பல்வேறு மாறுபாடுகளைகொண்டிருக்கிறது என்பதை உணர்ந்த கிஷோர் ஆரம்பகாலங்களில் சந்தைகளிலும், கடை வீதிகளிலும் தனது நேரத்தை செலவிட்டார்.
இந்த நாடே பெருந்தொற்று நோயுடன் போராடிக் கொண்டிருக்கும்போது ‘Necessity is the mother of invention’ (தேவைதான் கண்டுபிடிப்பின் தாய்) என்ற வாசகத்துக்கு இணங்க, சில புதிய முயற்சிகளும் கண்டுபிடிப்புகளும் நாள்தோறும் வந்து கொண்டிருக்கின்றன. இப்போது எல்லா அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் என எங்கு சென்றாலும் உள்ளே நுழையும்போதே சானிடைசர் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்ய வேண்டியிருக்கிறது. சானிடைசரை டிஸ்பென்ஸ் செய்வதற்காக காலால் பெடல் மூலம் இயக்கப்படும் சானிடைசர் டிஸ்பென்சர் என்ற ஒரு இயந்திரம் கிட்டத்தட்ட கட்டாயம் இருக்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இப்போது சந்தையில் விற்றுக் கொண்டிருக்கும் இயந்திரங்கள் ஸ்டீல் ஆங்கிள்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. அதற்கு மாற்றாக கார்ட்போர்டு என்ற காகித அட்டைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சானிடைசர் ஸ்டாண்டுகளை பொறியியல் பட்டதாரி இளைஞர் திரு. கார்த்திக் ரத்தினம் ஒரு ஸ்டார்ட்அப்தொழிலாக ஆரம்பித்து இந்த தயாரிப்பை வெற்றிகரமாக சந்தைக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவருடன் நாம் அலைபேசியில் தொடர்பு கொண்ட கலந்துரையாடலின் விவரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
2800 ஆண்டுகளுக்கு முன்பு உலகிலேயே முதன் முதலில் ஆந்திரா-கோல்கொண்டாவில்தான் வைரங்கள் கண்டெடுக்கப்பட்டன. வைரங்களை பட்டை தீட்டும் முறையையும் இந்தியர்கள்தான் முதன் முதலில் கண்டுபிடித்தனர். இன்றைக்கு உபயோகிக்கும் வைரங்களில் மிகவும் வயது குறைந்த வைரம்
இன்று சிறிய அளவில் பிசினஸ் செய்கிறவர்களுக்கு இருக்கும் ஒரு பெரிய கஷ்டம் என்னவென்றால், யார் யாருக்கு என்னென்ன கடன்கள் கொடுத்திருக்கிறோம் என்பதை குறித்து வைத்து கொள்வதுதான். விற்கும் போது சின்ன சின்ன துண்டு சீட்டில் எழுதி வைத்துவிட்டு அப்படியே மறந்து விடுவது வழக்கம். பின்னர் அந்த பணத்தில் பாதி வராமல் போய்விடும்.
கிராமங்களில் பசுமாடு வளர்ப்பவர்கள் சீம்பால் பற்றி நிச்சயம் அறிந்திருப்பார்கள். ஆனால் நகரவாசிகள் பெரும்பாலானவர்களுக்கு சீம்பால் மற்றும் அதன் நன்மைகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பசு கன்று போட்டதும் முதல் மூன்று நாட்கள் வரும் பாலைத்தான் சீம்பால் என்று அழைப்பார்கள். அதில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் பதப்படுத்தி தூளாக்கி சந்தைப்படுத்தும் ஸ்டார்ட் அப் தொழிலைத் நடத்தி வருகிறார் சென்னையைச் சேர்ந்த எஸ். முரளி.