இத் தொடரில் சுயம்புவாக அலங்கரிப்பவர் ஒரு பெண். அன்னையர் தினத்தன்று (மே 10) ஆப்ரிக்க அமெரிக்க இனத்தைச் சேர்ந்த ஓப்ரா கெயில் வின்ஃப்ரே (Oprah Gail Winfrey) பற்றி எழுதியது ஒரு தற்செயலான நிகழ்வு.
2007 ஆம் ஆண்டு புத்தகங்களை மட்டுமே ஆன்லைனில் விற்க தீர்மானித்து பன்சால் வசித்த வீட்டில் ரூ 4 லட்சம் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட மின்வணிக நிறுவனம் (e-commerce) ஃப்ளிப்கார்ட் நிறுவனம்.
இந்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்களின் அமைச்சகம் வெளியிட்ட உலக உணவு இந்தியா 2017 மாநாட்டின் அறிக்கையின் புள்ளி விபரங்களை இங்கு காண்பது மிகவும் முக்கியமானது. நவீன அறுவடை முறைகள் மற்றும் குளிர்பதன வசதிகள் உள்கட்டமைப்பு போதுமானதாக இல்லாததால், ஆண்டுதோறும் பழங்கள் மற்றும் காய்கறிகள் 4.6% முதல் 15.9% வரை வீணடிக்கப்படுவதை நாம் காணமுடிகின்றது.
ராஜஸ்தான் – பிகானீர் என்ற ஊரில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட “ஹல்திராம்” இன்று இந்தியாவில் தலைசிறந்த நொறுக்குத்தீனி பிராண்டுகளில் ஒன்றாகும்.
சேலத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக இயங்கி வரும் லே பிரடோ (Le Freddo) இன்டீரியர் நிறுவனர் திரு.ராஜ்குமார் அவர்களுடன் மொபைல் மூலம் தொடர்பு கொண்டதில் இன்டீரியர் டெக்கரேஷன் குறித்து பல சுவையான செய்திகள் தெரிந்துகொள்ள முடிந்தது.
கிராமங்களில் பசுமாடு வளர்ப்பவர்கள் சீம்பால் பற்றி நிச்சயம் அறிந்திருப்பார்கள். ஆனால் நகரவாசிகள் பெரும்பாலானவர்களுக்கு சீம்பால் மற்றும் அதன் நன்மைகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பசு கன்று போட்டதும் முதல் மூன்று நாட்கள் வரும் பாலைத்தான் சீம்பால் என்று அழைப்பார்கள். அதில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் பதப்படுத்தி தூளாக்கி சந்தைப்படுத்தும் ஸ்டார்ட் அப் தொழிலைத் நடத்தி வருகிறார் சென்னையைச் சேர்ந்த எஸ். முரளி.
நம்மில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை கட்டாயமாக இருக்கும். ஒரே இடத்தில் நிரந்தரமாக வேலை செய்வதால் பலருக்கு அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்த இயலாமல் போய்விடுகிறது.
தமிழகத்தின் மான்செஸ்டர் நகரம் என பெருமையுடன் அழைக்கப்படும் கோயம்புத்தூரில், சர்வதேச விமான நிலையத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள கேமியோ பம்புகள் மற்றும் மோட்டார்ஸ் (CAMEIO Pumps and Motors) ஒரு பிரபலமான உலகத் தரம் வாய்ந்த பிராண்ட். இது “ஆர்கோ ஆட்டோமேஷன்” என்ற பதிவு செய்யப்பட்ட பெயரில் தயாரிக்கப்படுகிறது.
தன்னுடைய நலத்திற்காக ஆரம்பித்து பல அணுகூலங்கள் கண்ட கரூரைச் சேர்ந்த இல்லத்தரசி கருணாம்பிகை, மற்ற பெண்களுக்கும் பயன்பட வேண்டும் என நினைத்து தொடங்கியதுதான் ‘மெல்லினம்’ ஆர்கானிக் சானிடரி நாப்கின் தயாரிக்கும் சிறுதொழில். அதற்கு துணையாக இருப்பவர் துணைவர் அருள்முருகன்.
நடுத்தர மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் ( MSME), உரிய நேரத்தில் நிதி கிடைக்காததால்தான் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகின்றன என்று சமீபத்திய ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. தேவையான நேரத்தில் தேவையான கடன் மூலம் நடைமுறை மூலதனம் கிடைத்தால்தான் சிறுதொழில் அமைப்புகள் பயணிக்க முடியும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வரும் சிறுதொழில் அமைப்புகளுக்கு நிதி உதவிகளை வங்கிகளில் இருந்து பெறுவதற்கு வகை செய்யும் வகையில் மத்திய அரசு ஏற்கனவே CGTMSE என்கிற திட்டத்தின்படி ரூபாய் 2 கோடி வரை எந்த சொத்தும் இல்லாமல் கடனாக வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் நடைமுறையில் வங்கிகள் இத்தகைய கடனை தகுதியான நிறுவனங்களுக்கு தேவையான நேரத்தில் கொடுக்கிறதா என்று பார்த்தால் ஏமாற்றமே மிச்சம்.